திருக்குர்ஆனின் சிறப்புகள்…

இன்று உலகில் வாழும் மக்கள் பல மதங்களை கொண்டவர்களாக இருக்கிறோம் ஒவ்வருவரும் தங்களிடத்தில் ஒரு வேதத்தை வைத்திருகிறார்கள். ஆனால்  அவர்கள் வைத்திருக்கும் வேதங்கள் பல முரண்பாடுகள் கொண்டவைகளாகவும், அறிவியலுக்கு ஒவ்வாதவைகளாகவும், நடைமுறை சாத்திய மற்றவைகளாகவும் இருக்கிறது என்று நம்மால் அறுதியிட்டு சொல்லி விட முடியும்.

ஆனால் முஸ்லிம்கள் வைத்திருக்கும் திருக்குர்ஆன் என்பது  எந்த முரண்பாடும் இல்லாத,அறிவியலுக்கு ஒத்துபோகிற நடைமுறை சாத்தியம் உள்ளதாக இருப்பதோடு மட்டும் அல்லாது வேதம் என்றால் என்ன அவற்றின் அளவுகோள் எப்படி இருக்கவேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக கற்றுத்தருகிறது.

இப்படிப்பட்ட அற்புதமான வேதத்தை வைத்திருக்கும் முஸ்லிம்கள் இந்த குர்ஆனை  எவ்வாறு பயன் படுத்துகிறார்கள் என்பதுதான் இங்கு  கேள்வி குறியாக எழும்புகிறது. குர்ஆன் என்றால் அதை பட்டுக் கம்பளத்தால் போர்த்தி யாரும் தொடாத இடத்தில் வைப்பதும் இறந்தவர்களுக்கு ஃபாத்திஹா ஓதுவதும், தட்டில் எழுதி கரைத்து குடிப்பதும் தாயத்தில் தொங்கவிடுவதும் என்று மார்க்கம் கற்றுத்தராததை செய்து கொண்டிருக்கிறோம்  இப்படிப்பட்ட அற்புதமான குர்ஆனை எப்படி அணுகவேண்டும் என்பதை சுருக்கமாக  தெளிவு படுத்துவதே இந்த பிரசுரத்தின் நோக்கம்.

முரண்பாடில்லா இறை வேதம்!

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்:4:82)

சவால் விடும் குர்ஆன்!

“இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:88)

சிந்திக்க தூண்டும் குர்ஆன்.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன் 47:24)

உலக மக்கள் அனைவருக்கும்மான ஒரே வேதம்!

(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன். (அல்குர்ஆன் 25:1)

இன்னும் இக்குர்ஆனை பற்றி நபி (ஸல்) சொன்ன சிறப்புக்கள்.

ஒன்றுக்குப் பத்து நன்மை.

“அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். “அ-ஃப், லாம், மீம்’ என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அ-ஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி : இப்னுமஸ்ஊத் (ரலி), நூல் : திர்மிதி 2910

இரு மடங்கு நன்மை.

“குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள்  இருக்கின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி : ஆயிஷா (ரலி), நூல்:முஸ்லிம் 798

மனிதரில் சிறந்தவர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர் யார் என்றால், யார் குர்ஆனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுக்கின்றாரோ அவர் தான். அறி : உஸ்மான் (ரலி), நூல் : புகாரி 5027

ஷைத்தானை விரட்டும் மருந்து.

“உங்கள் வீடுகளை மண்ணறை களாக ஆக்கி விடாதீர்கள். எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டு ஓடுகின்றான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 780

பாதுகாப்பு கிடைப்பது.

“நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள்.

உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டே இருப்பார். காலை வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 3275.

அழகிய உதாரணத்துக்குரியவர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது. அறி : அபூ மூஸல் அஷ்அரீ (ரலி), நூல் : புகாரி 5020.

இது போன்று ஏராளமான சிறப்புக்கள் திருக்குர்ஆனுக்கு இருக்கின்றன. நாம் அனைவரும் அதன் சிறப்புக்களை உணர்ந்து செயல்பட வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!

நோட்டீஸ் மாதிரியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…

வெளியீடு : 01/01/2017

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…