இவரை உங்களுக்குத் தெரியுமா?

இவரை உங்களுக்குத் தெரியுமா?

இவரைப் போன்ற ஒருவர் ஆட்சியாளராக பொறுப்பேற்றால் இன்றைய நவீன உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு காண்பார்அனைவரும் எதிர்பார்க்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார்

என்று இவரைப் பற்றி பிரிட்டன் நாட்டு அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறினார்.

யார் அவர்?

200 கோடிக்கும் அதிகமான உலக மக்கள் இவரை தங்களின் தலைவராக ஏற்றுள்ளார்கள். அவருக்காக தங்களின் உயிரையும் அர்பணிக்கத் துணிவார்கள்.

ஆனால் அவர்கள் அவரைப் பார்த்ததில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவருக்கு ஒரு சிலையுமில்லை. ஓவியப் படமுமில்லை. அவர் எப்படி இருப்பார் என்றே தெரியாமல் அவரை நேசிக்கிறார்கள்!

ஏன்?

எழுதப் படிக்கத் தெரியாதவர். அவர் யாரிடமும் கல்வி பயின்றதில்லை. ஆனால் அவரது ஒவ்வொரு அசைவும் சட்டமாக போற்றப்படுகிறது! அவரது ஒவ்வொரு சொல்லும் கட்டளையாக பேணப்படுகிறது!

எப்படி?

24 மணி நேரமும் இடைவிடாது அவரது பெயர் உலகில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அவரது பெயர் சொல்லப்படும் போது அவருக்காக அனைவரும் பிரார்த்திக்கிறார்கள்.

வரலாற்றில் எப்போதும் அதிகமாக வைக்கப்படும் பெயர் அவருடையது!

இவ்வளவு நேசிக்கப்பட்டும் அவர் வணங்கப்படுவதில்லை!

அப்படி என்ன செய்தார்?

மனிதனின் மாண்பை உணர்த்தினார். படைப்புகள் அனைத்தை விடவும் மனிதன் உயர்ந்தவன்.

படைத்த இறைவனைத் தவிர யாருக்கும் மனிதன் தலைவணங்கக் கூடாது என்று போதித்தார்.

படைத்த இறைவன் ஒருவனை மட்டுமே  வணங்க வேண்டும். இறைவன் ஈடு இணையில்லாத மிகப் பெரியவன். அவனுக்கு தாய், தந்தை இல்லை! மனைவி, மக்கள் இல்லை!

இறைவன் குறைகள் ஏதும் இல்லாதவன். அவனுக்கு உணவு தேவையில்லை. உறக்கம் தேவையில்லை. ஓய்வும் தேவையில்லை!

மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவர் மீது இறைவனும் இறக்கம் காட்ட மாட்டான் என்று எச்சரித்தார்.

தாகம் கொண்ட நாய்க்கு தண்ணீர் புகட்டியரும் சுவனம் செல்வார் என்று இரக்கம் கொள்ள வலியுறுத்தினார்!

“நல்ல தலைவர்கள் யார் தெரியுமா?

நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள். அவர்கள் உங்களை நேசிப்பார்கள்.

அவர்கள் உங்களுக்காக பிரார்த்திப்பார்கள். நீங்கள் அவர்களுக்காக பிரார்த்திப்பீர்கள்”,

என்று தலைவர்களுக்கு இலக்கணம் சொல்லி வாழ்ந்தும் காட்டினர்!

அதனால் தான் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறினார்,

இவரைப் போன்ற ஒருவர் ஆட்சியாளராக பொறுப்பேற்றால் இன்றைய நவீன உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு காண்பார்அனைவரும் எதிர்பார்க்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார் என்று!

அவர்இறைவனின் தூதர் முஹம்மது ஆவார்(இறைவன் அவருக்கு அருள் புரிவானாக)

வெளியீடு:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

இந்த துண்டு பிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…

 

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…