TNTJ ரியாத் மண்டலம் நடத்திய 82வது மெகா இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் (இந்த வருட ஹஜ் பயணிகளில் தேவைப் படுவோருக்காக) நடைபெற்றது.

இரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்க பணியுடனுன் மனித நேய பணியையும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா மண்டலங்கள், தமிழக கிளைகள் மற்றும் மாவட்டங்களுக்கு நிகராகபிராமாண்ட இரத்த தான முகாம்களை நடத்தி ஆயிரக்கணக்கான யூனிட் இரத்ததை கொடையாக வழங்கி வருகிறது.


அதன் தொடர்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும் கிங் சவுத் மொடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனை இனைந்து நடத்திய 82வது இரத்த தான முகாம் இன்று 27/07/2018 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம் காலை 8.00 மணிக்கு துவங்கியது. விடுமுறை நாட்களையும்பொருட்படுத்தாமல் மக்கள் சாரை சாரையாக மருத்துவமனையில் குவிந்தார்கள். மருத்துவ ஊழியர்களின் சிரமத்தை குறைக்க தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்கள் இரத்த தான விருப்ப படிவம் நிரப்பி வழங்கினர்.

இந்த முகாமில் 154 பேர் பதிவு செய்தனர், உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை அடிப்படையில் 138 பேர் இரத்த கொடை அளித்தனர். இதில் தமிழ்பேசும் சகோதரர்கள் மட்டுமல்லாமல் நமது அண்டை மாநில சகோதரர்களும் கணிசமாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்,மருத்துவமனை இரத்த வங்கி பொறுப்பாளர் திரு. இப்ராஹீம் அல் தயிலி முகாமை பார்வையிட்டு தமிழ் பேசும் மக்களின் உயிர்காக்கும் இந்த மனிதநேய பணியை பாராட்டி தனது வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்து கொண்டார். மேலும், அவர் நிர்வாகிகளிடத்தில் பேசும் போது, இதுவரைஇந்த மருத்துவமனையில் ஒரு முகாமில் இந்த அளவுக்கு இரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலத்தை தவிர வேறு எந்தஅமைப்புகளும் நடத்தியதில்லை என்று தொரிவித்தார்.


ரியாத் மண்டல இரத்த தான ஒருங்கினைப்பாளர் சகோ. ரைஸுல் கமால் (உதவி) அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக இதுவரை 81 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது என்றும் நமது இந்த மனித நேய பணியை பாராட்டி சவுதி சுகாதாரத்துறைசார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது.


ரியாத் மண்டலத்தின் தலைவர் சகோ. ஹாஜா முகைதீன் அவர்கள் இரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றி கூறும் போது திருக்குர்ஆன் 5 அத்தியாயம் 32 வசனம் “யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்ககூடியவர்கள் என்றும் ஆனால் இன்றைய மீடியாக்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்து வருவதை களையவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை எதிர்பார்த்து இந்த பணியை செய்து வருவதாக கூறினார். கடந்த 15 வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் வளைகுடா மண்டலங்களில் தொடர்ந்து முன்னணியில் உள்ளதாகவும், இதைபாராட்டி பல்வேறு விருதுகளை மருத்துவமனைகள் வழங்கியுள்ளன என்றார்.

இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

…எல்லா புகழும் இறைவனுக்கே….

Related Posts

சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!!!

சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!!!

ரியாத்:- உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் மற்றும் புனிதமான ஹஜ் மாதத்தில் ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!! அசாதாரணமான சூழலும் தொடர் நோய்த்தொற்று காலமாக இருந்தாலும் பிறர் நலம் காக்கும் நோக்கத்தில்…

இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்!!!

இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்!!!

சவூதி அரேபியா:- எண்ணற்ற கனவுகளுடன் தங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ள இந்தியர்கள் தங்களின் ஓய்வு நேரங்களை பல்வேறு சமூக நலப்பணிகளுக்காக செலவிட்டு வருகின்றனர் அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ)…

மொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை

மொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் சுலைமானியா கிளை சார்பாக இன்று 25/12/2020 வெள்ளிக்கிழமை (காலை 10:30 மணி முதல் மாலை 04:0 மணி வரை) சுலைமானியா மதுரா, அனார்கலி ஹோட்டல் எதிரில் (தாய்மடி ஹோட்டல்…

மொபைல் இரத்ததான முகாம் – நியூ சென்னையா கிளை

மொபைல் இரத்ததான முகாம் – நியூ சென்னையா கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் நியூ சென்னையா கிளை சார்பாக இன்று 18/12/2020 வெள்ளிக்கிழமை (மதியம் 12:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை) ரியாத் நியூ இன்டர்ஸ்ட்ரியல் ஏரியா, துபாய் மார்க்கெட்…

மொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை!

மொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் – சித்தீன் கிளை சார்பாக இன்று 27/11/2020 வெள்ளிக்கிழமை (மதியம் 12:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை) துப்பாத் (ஹாரா) பகுதியில் கிங் ஃபஹத் மெடிக்கல்…

மொபைல் இரத்ததான முகாம் – TNTJ சித்தீன் கிளை!

மொபைல் இரத்ததான முகாம் – TNTJ சித்தீன் கிளை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் சித்தீன் கிளை சார்பாக இன்று 13/11/2020 வெள்ளிக்கிழமை (மதியம் 12:30 மணிமுதல் மாலை 05:00 மணிவரை) ஹாரா பகுதியில் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையுடன் இணைந்து…